sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

/

கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்


ADDED : பிப் 13, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

ஓமலுார்:தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அபிபிரசாத், 25. பி.சி.ஏ., படித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமுதா, 24. டிப்ளமோ படித்துள்ளார்.

பேச முடியாத மாற்றுதிறனாளிகளான இருவரும், தர்மபுரியில் ஒன்றாக பள்ளியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 9ல் குமுதா வீட்டிலிருந்து வெளியேறி, அபிபிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். நேற்று, சேலம் எஸ்.பி., அலுவலத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்து ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இருவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெங்களூரில் காதல்

தலைவாசல், சதாசிவபுரத்தை சேர்ந்தவர் பிரதீப், 30. பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, எம்.எஸ்சி., படிக்கிறார். பெங்களூருவை சேர்ந்தவர் சிந்து, 21. பி.பி.ஏ., 3ம் ஆண்டு படிக்கிறார். இருவரும் காதலித்த நிலையில், இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த, 9ல், வீட்டை விட்டு வெளியேறி, நேற்று, சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனுார் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். மாணவியின் பெற்றோர் ஏற்காததால், பிரதீபுடன், மாணவியை அனுப்பினர்.






      Dinamalar
      Follow us