sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற மகன் மாயம்: சேலத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி

/

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற மகன் மாயம்: சேலத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற மகன் மாயம்: சேலத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற மகன் மாயம்: சேலத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி


ADDED : பிப் 11, 2025 07:35 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த ஏகாபுரத்தை சேர்ந்த மூதாட்டி அழகம்மாள், 70. நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த இவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்-கொண்டு தீக்குளிக்க

முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூதாட்டியை தடுத்து மீட்டனர். அதன்பின்,

போலீசா-ரிடம் மூதாட்டி கூறியதாவது:என்னுடைய மகன் பச்சியண்ணன், 45, விவசாயம் செய்து வந்தார். கடந்தாண்டு மார்ச், 4ல்,

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர்

கிடைக்காததால், மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தேன். ஓராண்டாகியும் என் மகனை

கண்டுபிடித்து தர-வில்லை. பலமுறை வலியுறுத்தியும் போலீசார் கண்டுகொள்ள-வில்லை.

மருமகள் விஜயா மற்றும் பேரன், பேத்திகளும், பச்சி-யண்ணணை தேடி வருகின்றனர். இருந்த ஒரு

மகனும் காணாமல் போய்விட்டதால், அந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்று, தீக்-குளிக்க வந்தேன்.

என் மகனை கண்டுபிடிக்காமல் இங்கிருந்து போகமாட்டேன்.இவ்வாறு கூறினார்.சேலம் டவுன் போலீசார், மகுடஞ்சாவடி போலீசாரை தொடர்பு கொண்டு, இந்த வழக்கில் மேல்

நடவடிக்கை எடுக்கும்படி பரிந்-துரைத்து, மூதாட்டியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us