sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம்

/

அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம்

அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம்

அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம்


ADDED : டிச 20, 2025 07:04 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: அனுமன் ஜெயந்தியை ஒட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று, விசேஷ ஸ்தபன திருமஞ்சனம், 1,008 வடை மாலை சாத்துபடி, குலசேகர ராமானுஜதாசரின் சொற்பொழிவு, திருவாராதனை, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, தீர்த்த பிர-சாதம் வழங்கப்பட்டது. பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் எதிரே உள்ள அனுமனுக்கு, வெண்ணெய் காப்பு அலங்-காரம், வடை மாலை சாத்தப்பட்டது.

முதல் அக்ரஹாரம் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், வெங்க-டாஜலபதி, ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணர், சிங்கமெத்தை சவுந்தரராஜர், சின்னதிருப்பதி பெருமாள் உள்ளிட்ட கோவில்க-ளிலும் பூஜைகள் நடத்தப்பட்டன.

மேட்டூர் வரதராஜ பெருமாள் கோவில் ஆஞ்சநேயர், கொளத்துார், அச்சங்காடு குடவறை சிற்ப ஆஞ்சநேயர், வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மேச்சேரி, தெத்திகிரிப்பட்டி அபய ஆஞ்சநேயர் வெள்ளி காப்பு அலங்-காரம்; கைகாட்டி வெள்ளாறு, வசந்தம் நகர் ராமபக்த ஆஞ்ச-நேயர், 10,008 வடைகள் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

காடையாம்பட்டி தாலுகா காவருள்ளி சின்ன திருப்பதியில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்-காரத்தில் அருள்பாலித்தார். ஓமலுார் செவ்வாய் சந்தை அருகே காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்நேயர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. கவுண்டம்பட்டி யோக கணபதி கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பாலாபி-ஷேகம் செய்யப்பட்டது.

தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயமங்கள ஆஞ்சநேய-ருக்கு வெண்ணெய் காப்பு, வடை மாலை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. உலக நன்மை வேண்டி, தாரமங்கலம் சக்தி மாரி-யம்மன் கோவிலில், 30ம் ஆண்டாக விளக்கு பூஜை நடந்தது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் வழிபட்டனர்.

ஆத்துார், கோட்டையில், வடக்கு திசை நோக்கி உள்ள குபேர ஆஞ்சநேயர், வெற்றிலை, வடை மாலை அலங்காரத்தில் அருள்-பாலித்தார். தம்மம்பட்டி நரசிம்ம பெருமாள் கோவிலில், 41 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனுமன் கோவில்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us