/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் சிறப்பு பஸ்கள்
/
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் சிறப்பு பஸ்கள்
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் சிறப்பு பஸ்கள்
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் சிறப்பு பஸ்கள்
ADDED : செப் 05, 2025 01:26 AM
சேலம், மிலாது நபி, ஓணம், வார இறுதி நாட்கள் ஆகியவற்றால், அரசு போக்குவரத்துக்கழக, சேலம் கோட்டம் சார்பில் நேற்று முதல், 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 8 வரை, இந்த பஸ்கள், சேலம், பெங்களூரு, சென்னை, கிளாம்பாக்கம், ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து இயக்கப்படுகிறது.
மேலும் நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி; ராசிபுரத்தில் இருந்து சென்னை, திருவண்ணாமலை; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தவிர வரும், 7ல் பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்கு, வரும், 6 முதல், 8 வரை, சேலம், ஆத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து பயணியர் தேவைக்கேற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு, 6 மாலை, 5:00 முதல், 8 மாலை, 5:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.