/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
30 வரை தொழில் கடன் பெற சிறப்பு முகாம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அழைப்பு
/
30 வரை தொழில் கடன் பெற சிறப்பு முகாம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அழைப்பு
30 வரை தொழில் கடன் பெற சிறப்பு முகாம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அழைப்பு
30 வரை தொழில் கடன் பெற சிறப்பு முகாம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:36 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சேலம் கிளை சார்பில், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம், வரும், 30 வரை நடக்கிறது. சேலம், ஸ்வர்ணபுரி, லட்சுமி வளாகத்தில் உள்ள முதல் தளத்தில் இயங்கும் கிளை அலுவலகத்தில், முகாம் நடக்கிறது.
இதில் தமிழக முதலீட்டு கழகம் செயல்படுத்தும் பல்வேறு கடன் வசதி திட்டம், அரசு மானியங்கள், புது தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாடு, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள், கருணாநிதி பசுமை ஆற்றல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் பெறலாம்.
தகுதி வாய்ந்த தொழில்களுக்கு, தமிழக அரசின், 25 சதவீத முதலீடு மானியமாக, 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள், உற்பத்தியை மேம்படுத்தி கொள்ள ஏதுவாக விரிவாக்கம் செய்தல், நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக, 5 சதவீத வட்டி மானியம் உண்டு.
முகாமில் சமர்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புது தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். தகவலுக்கு, 94443 96850, 94443 96832 என்ற எண்களில் அழைக்கலாம்.