/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி முன்னிட்டு சிறப்பு வார்டு தயார்
/
தீபாவளி முன்னிட்டு சிறப்பு வார்டு தயார்
ADDED : அக் 19, 2025 02:35 AM
சேலம்: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பட்டாசு வெடித்து யாரும் தீக்காயம் அடைந்தால், அவர்-களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, சேலம் அரசு மருத்துவம-னையில், 31 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுக்கு ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், செவிலியர்கள், 24 மணி நேரமும் பணிபுரியும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வார்டில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தீ விபத்துக்கு சிகிச்சை அளிக்க, தனி மருத்துவ குழு அமைக்கப்-பட்டுள்ளது. அவர்கள், 24 மணி நேரமும் சிறப்பு வார்டில் இருப்பர். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த வார்டு, நேற்று முதல் செயல்படுகிறது என, மருத்து-வமனை நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.