/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு
/
வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு
வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு
வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு
ADDED : நவ 16, 2025 01:58 AM
சேலம்;அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு
பேச்சுப்போட்டி, வரும், 19, 20ல், சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு, காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை, போட்டி தனித்தனியே நடக்கும். 19ல், 'தமிழ்மொழி வளர்ச்சிக்கான அண்ணாதுரையின் அரும்பணி; பெண்ணுரிமைக்கு அண்ணாதுரை அளித்த முக்கியத்துவம்; சமூக நீதிக்கான அண்ணாதுரையின் கொள்கைகள்' தலைப்புகளில் பள்ளி மாணவர்களும், 'அண்ணாதுரையின் கூட்டாட்சி கொள்கை; அண்ணா
துரை சிறந்த எழுத்தாளர்; சட்டசபையில் அண்ணாதுரை' தலைப்புகளில் கல்லுாரி மாணவர்களும் பேசலாம்.
மறுநாள் நடக்கும் போட்டியில் பள்ளி மாணவர்கள், 'ஈ.வெ.ரா.,வின் பெண்ணியம்; ஈ.வெ.ரா.,வின் சமூக சீர்த்திருத்தங்கள்; சுயமரியாதை இயக்கம்' தலைப்புகளிலும், கல்லுாரி மாணவர்கள், 'ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு போராட்டம்; ஈ.வெ.ரா.,வின் எழுத்து பணி;
ஈ.வெ.ரா.,வும் மூட நம்பிக்கை ஒழிப்பும்' தலைப்புகளில் பேசலாம். தகவலுக்கு, மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரை, 0427 - 2417741 என்ற எண்ணில் அழைக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

