sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'

/

'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'

'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'

'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'


ADDED : டிச 08, 2024 01:28 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், டிச. 8-

மேட்டூர் அணை கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு தளவாடங்களை தயாரிக்க, ஆங்கிலேய அரசு சார்பில், அணை அடிவாரத்தில், 1926ல் பணிமனை தொடங்கப்பட்டது. காலப்போக்கில் தமிழக பொதுப்பணித்துறை, தொடர்ந்து மின்வாரியத்திடம் வந்தது. தற்போது தனி மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் பணிமனையில், நிர்வாகம், களப் பணியில், 24 பெண்கள் உள்பட, 206 பேர் மட்டும் பணிபுரிகின்றனர்.

ஆனால் கட்டுமான பணிக்கு சமீபகாலமாக புது தளவாடங்களை, மின் கழகம் கொள்முதல் செய்யாததால் ஊழியர்கள் பணிக்கு வந்து விட்டு, இயந்திரங்களை மட்டும் சுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் ஊழியர்களை வேறு பணியிடங்களுக்கு மாற்றவும், பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விடவும், மின்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், பணிமனைக்கு சென்று ஊழியர்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். பின், பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம்விட்டால் போராட்டம் நடத்துவோம் என, ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us