/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உளுந்துார்பேட்டையில் இருந்து ரூ.17 லட்சத்துடன்வந்த மாணவன்; மீட்ட சேலம் டிரைவருக்கு பாராட்டு
/
உளுந்துார்பேட்டையில் இருந்து ரூ.17 லட்சத்துடன்வந்த மாணவன்; மீட்ட சேலம் டிரைவருக்கு பாராட்டு
உளுந்துார்பேட்டையில் இருந்து ரூ.17 லட்சத்துடன்வந்த மாணவன்; மீட்ட சேலம் டிரைவருக்கு பாராட்டு
உளுந்துார்பேட்டையில் இருந்து ரூ.17 லட்சத்துடன்வந்த மாணவன்; மீட்ட சேலம் டிரைவருக்கு பாராட்டு
ADDED : ஏப் 18, 2025 01:18 AM
சேலம் :சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் காலை கையில் பேக்குடன் வந்த பள்ளி மாணவன், அங்கு நின்றிருந்த சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜமாணிக்கத்தின் ஆட்டோவில் ஏறி, எனக்கு யாரும் இல்லாததால், வேலை வாங்கி தர முடியுமா என்று கேட்டுள்ளார். தன் மகன் திருப்பூரில் வேலையில் இருப்பதால், உனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி, தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். கையில் ஏதாவது பணம் வைத்துள்ளாயா என கேட்டுள்ளார்.
அதற்கு சிறுவன் என்னிடம், 40 ஆயிரம் ருபாய் உள்ளது என கூறியபோது, சந்தேகமடைந்த டிரைவர் எப்படி இவ்வளவு பணம் வந்தது என கேட்டுள்ளார். தந்தை திட்டியதால் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்ததாக மாணவன் கூறினான். தனக்கு யாரும் இல்லை என கூறிய நிலையில், தந்தை பற்றி கூறியதால், சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர், மாணவன் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது, கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். டிரைவர், தனது தங்கையின் கணவர் ராஜகோபாலுடன், மாணவனை கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்திய பின், பையில் இருந்த பணத்தை எண்ணியபோது, 17 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. கன்னங்குறிச்சி ஸ்டேஷனுக்கு வந்த உதவி கமிஷனர் அஸ்வினி சிறுவனிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுவன், உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்ததாக தெரிவித்தார். பின், தந்தையின் மொபைல்போன் எண்ணை வாங்கி தகவல் தெரிவித்தனர்.
சேலம் வந்த சிறுவனின் தந்தை சத்தியநாராயணனிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சியில் லேத் பட்டறை வைத்திருப்பதும், தற்போது விடுமுறை என்பதால், பட்டறையில் வேலை செய்ய சொல்லி மகனிடம் தந்தை கூறியுள்ளார். இதில் கோபித்து கொண்டு வீட்டில் இருந்த, 17 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு சேலம் வந்தது தெரியவந்தது. தந்தையிடம் மாணவனையும், பணத்தையும் ஒப்படைத்தனர். டிரைவர் ராஜமாணிக்கம், அவரது உறவினர் ராஜகோபால் ஆகியோரை, உதவி போலீஸ் கமிஷனர் அஸ்வினி பாராட்டினார்.

