sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்

/

கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்

கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்

கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்


ADDED : அக் 24, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 24, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, சங்ககிரி, கத்தேரி ஊராட்சி வளையக்காரனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 77 பேர் படிக்கின்றனர். சில நாட்களாக பெய்த மழையால் கடந்த, 16ல், அப்பள்ளி வகுப்பறை கட்டடங்களின் முகப்பு பகுதியின் மேற்பகுதியில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதனால் வகுப்பறையை சீரமைக்கக்கோரி, 17ல், மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. அன்று, 7 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.

இந்நிலையில், 18 முதல் நேற்று முன்தினம் வரை பள்ளிக்கு விடுமுறையால் செயல்படவில்லை. நேற்று பள்ளியை திறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து, அருகே கத்தேரியில் உள்ள தொடக்கப்பள்ளியில், வளையக்காரனுார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி வளையக்காரனுார் மாணவர்களுக்கு, கத்தேரி பள்ளியில் வகுப்பு நடந்தது.

இதுகுறித்து பி.டி.ஓ., முத்துசாமியிடம் கேட்டபோது, ''வளையக்காரனுார் பள்ளி சீரமைப்பு பணி நடப்பதால், அப்பள்ளி மாணவர்கள் கத்தேரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us