sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; மலை கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்

/

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; மலை கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; மலை கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; மலை கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்


ADDED : அக் 11, 2024 07:06 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் இருந்து, 22 கி.மீ.,ல் வெள்ளக்கடை ஊராட்சி மோட்டூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் என, தினமும், 100க்கும் மேற்பட்டோர் ஏற்காடு வந்து செல்கின்றனர். ஆனால் அங்கிருந்து மக்கள் வந்து செல்ல, 36 இருக்கை கொண்ட ஒரே ஒரு பஸ் மட்டும், போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. இதனால் அந்த கிராமத்துக்கு செல்லும் அனைவரும் ஒரே பஸ்சில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

போதிய இருக்கை வசதி இல்லாததால் முதியார், பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், அந்த பஸ்சில், 70 பேருக்கு மேல் பயணிக்கின்றனர். பலர் படியில் தொங்கி கொண்டு செல்கின்றனர். மலைப்பாதை மிக குறுகலாக உள்ளதால், படியில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் குறிப்பிட்ட நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us