ADDED : நவ 06, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருகிறார். சூரசம்ஹாரம் நாளை மதியம், 3:00 மணிக்கு நடக்க உள்ளது.
8 காலை, மயில் வாகனத்தில் கந்தசாமி, திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடக்கும். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சரஸ்வதி, செயல் அலுவலர் குணசேகரன்(பொ), கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.