ADDED : ஜூன் 05, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், உடையார்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், கடந்த மே, 26ல் வைகாசி திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், முத்துமாரியம்மன் திருவீதி உலா நடந்தது. அப்போது நவரத்தின அலங்காரத்தில் உற்சவர் அம்மன், முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார். நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
மஞ்சள் நீரை, அம்மன் மீது ஊற்றி அபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டு பாடினர். மூலவர் முத்துமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் வழிபட்டனர்.

