sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷக திருப்பணி முன்னிட்டு கோபுர விமானங்களுக்கு பாலாலயம்

/

கும்பாபிேஷக திருப்பணி முன்னிட்டு கோபுர விமானங்களுக்கு பாலாலயம்

கும்பாபிேஷக திருப்பணி முன்னிட்டு கோபுர விமானங்களுக்கு பாலாலயம்

கும்பாபிேஷக திருப்பணி முன்னிட்டு கோபுர விமானங்களுக்கு பாலாலயம்


ADDED : செப் 06, 2024 07:42 AM

Google News

ADDED : செப் 06, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், காரியசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபி ேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மராமத்து பணி மேற்கொள்ள வசதியாக, முதல்கட்டமாக கோபுர விமானங்கள், மடைப்பள்ளி தாயாருக்கு மட்டும் நேற்று, பாலாலயம் செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று முன்தினம் கோபுர விமானங்கள், மடைப்பள்ளி தாயார் உருவங்களை அட்டையில் சித்திரமாக வரைந்து ஊர்வலமாக நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அன்று இரவு பூர்வாங்க யாக பூஜை செய்து கோபுர விமானம், கலசங்களில் இருந்த சக்தியை கும்பத்தில் ஆவாஹனம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.நேற்று காலை, சக்தியை ஆவாஹனம் செய்த கலசம், கோபுர சித்திரங்களை வைத்து சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதியுடன் கோபுர விமான சக்தியை சித்திரங்களுக்கு ஏற்றி பாலாலயம் செய்து வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். கோபுரங்களுக்கு மட்டும் பாலாலயம் செய்யப்பட்டதால், கோவிலில் நடக்கும் நித்ய பூஜை, உற்சவங்கள் வழக்கம்போல் நடைபெறும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us