ADDED : ஜூலை 27, 2025 12:50 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, பள்ளிதெருப்பட்டி ஊராட்சி மாக்கனுார் அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையல் கூடம் புதிதாக கட்டப்பட்டு, ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், சத்துணவு சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சமையல் கூடத்துக்கு தொடக்கப்பள்ளியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது.
