sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

/

குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 24, 2024 01:30 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

வீரபாண்டி, அக். 24-

சேலம், பெரிய சீரகாபாடி ஊராட்சி ஏரிக்காடு, எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் காளியம்மன் கோவில் வீதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 6 மாதங்களாக குடிநீர் மட்டுமின்றி, ஆழ்துளை குழாய் தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர்., நகரில், 800 லிட்டர் கொள்ளளவில் மினி தொட்டி மட்டும் உள்ளது. அதில் நிரப்பப்படும் தண்ணீர், 2 மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால், அரை கி.மீ., சென்று, ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

தவிர, இப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை; டேங்க் ஆப்பரேட்டர் முறையாக தண்ணீர் திறந்து விடுவதில்லை என குற்றம்சாட்டியிருந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலர், தலைவர் மட்டுமின்றி கிராம சபை கூட்டத்திலும் முறையிட்டு நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு பெரிய சீரகாபாடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கேயே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரபாண்டி ஒன்றிய பி.டி.ஓ., தனபால்(கி.ஊ.,) உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சு நடத்தி, 10 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us