/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணுக்கு பிடிவாரன்ட் கைது செய்த போலீசார்
/
பெண்ணுக்கு பிடிவாரன்ட் கைது செய்த போலீசார்
ADDED : அக் 17, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் தாதுபாய் குட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பக வடிவு, 43, இவர் மீது, கடந்த 2010 ல், டவுன் போலீசார், அடிதடி வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு சேலம் ஜே.எம்.எண் 1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2021க்கு பின், வழக்கு விசாரணைக்கு செண்பக வடிவு ஆஜராகவில்லை.
இதனால் பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார், நேற்று செண்பக வடிவினை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.