sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்மி, கோலாட்டம் ஆடிய பெண்கள் கத்தி போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்

/

கும்மி, கோலாட்டம் ஆடிய பெண்கள் கத்தி போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்

கும்மி, கோலாட்டம் ஆடிய பெண்கள் கத்தி போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்

கும்மி, கோலாட்டம் ஆடிய பெண்கள் கத்தி போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்


ADDED : மார் 31, 2025 02:12 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: யுகாதி பண்டிகை எனும் தெலுங்கு புத்தாண்டையொட்டி, சேலம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அதன் சுற்று வட்-டாரங்களில் வசிக்கும் தெலுங்கு தேவாங்க சமூகத்தினர், அவர்க-ளது குல தெய்வமான சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே குவிந்தனர்.

அங்கு மூலவர் அம்மன், ராமலிங்கேஸ்வரருக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபி ேஷகம் செய்தனர். அம்-மனுக்கு புஷ்ப பாவாடை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்-தனர்.

ராமலிங்கேஸ்வரருக்கு பரிவட்டம் கட்டி ராஜ அலங்காரத்தில், மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில் முன் கூடிய சிறுமியர் முதல் வயதான பெண்கள் வரை, பாரம்பரிய கும்மி, கோலாட்டம் ஆடி, புத்-தாண்டு வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர்.

அதேபோல் சிறுவர் முதல் பெரியவர் வரை, 'ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் முழங்க, கூரான கத்தியால் தோள் பட்டைகளில் கீறிய-படி வீரக்குமாரர்கள் முக்கிய வீதிகள் வழியே, சக்தியை ஊர்வல-மாக அழைத்து வந்தனர்.

மேலும் நல்ல மழை பொழிந்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, ஏராளமான பெண்கள், பால், தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மதியம் அனைவருக்கும் அன்ன-தானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us