sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டம் ரூ.738 கோடி திட்டம் தனியார் வசம் செல்கிறது

/

சேலத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டம் ரூ.738 கோடி திட்டம் தனியார் வசம் செல்கிறது

சேலத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டம் ரூ.738 கோடி திட்டம் தனியார் வசம் செல்கிறது

சேலத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டம் ரூ.738 கோடி திட்டம் தனியார் வசம் செல்கிறது


ADDED : ஜன 23, 2025 06:30 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்-டப்பணிகளை மேற்கொள்ள, 738 கோடி ரூபாயில் ஒப்பந்தம் அறி-விக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் வசிக்கும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோ-ருக்கு, மேட்டூர் தனிக்குடிநீர் திட்டத்தில் தினமும், 135 எம்.எல்.டி., குடிநீர், குழாய் வாயிலாகக் கொண்டு வரப்பட்டு, 56 மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக வீடுகள், வணிக நிறுவனங்க-ளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில், 3 4 நாட்க-ளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின், 'அம்ருத்' திட்டத்தில், 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்-ளது. முதற்கட்டமாக, 6 வார்டுகளில் மட்டும் குடிநீர் இணைப்பு வழங்க, தனியார் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அனுமதி அளிக்-கப்பட்டது.அதில், 20,000 இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 70 சதவீதப் பணி முடிந்துள்ளது.இரண்டாம் கட்டமாக, மாநகராட்சியின் விடுபட்ட அனைத்து பகு-திகளுக்கும், 24 மணிநேர குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 738 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 2.34 லட்சம் வீடுக-ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது, 2040ல், சேலம் மாநகராட்சி மக்கள் தொகை, 13.24 லட்ச-மாக அதிகரிக்கும் என கணக்கிட்டு, அதற்கேற்ப திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனம், குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு, 25 ஆண்-டுக்கு, பராமரிப்பு, வினியோகத்தை மேற்கொள்ளும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டப் பணி முடிந்து அமலுக்கு வந்தால், ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் மீட்டர் பொருத்தி, 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிக்கப்படும். அப்போது மின்கட்டணம் போல, பயன்ப-டுத்தும் குடிநீர் அளவுக்கேற்ப, கட்டணம் செலுத்த வேண்டும்.மாநகராட்சியில், 1.50 லட்சம் குடியிருப்புகள் இருந்தபோதும், 1 லட்சம் வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்-டுள்ளன. மற்றவர்களில் பெரும்பாலோர், பொது குடிநீர் குழாயில் குடிநீர் பிடித்து பயன்படுத்துகின்றனர். இத்திட்டம் அமலுக்கு வரும்போது, அனைவருக்கும் இணைப்புகள் வழங்கப்படும் என்-பதால், பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும். அனைவரும் குடிநீரை கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.






      Dinamalar
      Follow us