sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க உத்தரவு

/

பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க உத்தரவு

பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க உத்தரவு

பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க உத்தரவு


ADDED : ஜூலை 18, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், பெண் பணியாளர்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாத்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை, அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பணியிடங்களில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களுக்கு தீர்வு காணவும், 2013ல் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும், அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை விசாரிக்க, உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்

பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில், வேலையளிப்பவர் மீது, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில், உள்ளக புகார் குழு அமைக்கப்படுவதோடு, சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

உள்ளக குழுவின் உறுப்பினர்கள் விபரம், பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை அனைத்து பணியாளர்களும் தெளிவாக காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

இப்பிரச்னைகளை கையாள, நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க வழிமுறைகளை, அரசாணையாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ளது. இதை அனைத்து வேலையளிப்பவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us