/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருப்பூர் பெண்ணிடம் சில்மிஷம்: 'போதை' போலீஸ்காரர் கைது
/
திருப்பூர் பெண்ணிடம் சில்மிஷம்: 'போதை' போலீஸ்காரர் கைது
திருப்பூர் பெண்ணிடம் சில்மிஷம்: 'போதை' போலீஸ்காரர் கைது
திருப்பூர் பெண்ணிடம் சில்மிஷம்: 'போதை' போலீஸ்காரர் கைது
ADDED : டிச 29, 2024 08:53 AM
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலுார் போலீஸ் சிறப்பு பிரிவு போலீஸ்காரர் கலையரசன், 35. இரு நாட்களுக்கு முன், இரவில் மது அருந்தி-விட்டு, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கு குழந்தை-யுடன் நின்றிருந்த திருப்பூர் பெண்ணிடம் பேச்சு கொடுத்தபடி, சில்மிஷம் செய்துள்ளார்.
பெண் கூச்சலிட, அங்கிருந்தவர்கள், கலையரசனை எச்சரித்தனர். அதற்கு அவர், 'நான் போலீஸ்காரன். என்னையே மிரட்டுகிறீர்-களா' என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதை அறிந்து அங்கு வந்த பள்ளப்பட்டி போலீசாரிடம், கலையரசன் ஒப்படைக்-கப்பட்டார். அவர் போதையில் தள்ளாடியதால், போலீசாரும் எச்-சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து, மாநகர கமிஷனர் பிரவீன்குமார் அபிநபுக்கு தகவல் சென்றது. அவர், கலையரசனை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து, நேற்று முன்-தினம் கலையரசனை, போலீசார் கைது செய்தனர்.அதேநேரம் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி-யது, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் நெப்போலியன், நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., அன்பழகனிடம், துணை கமிஷனர் கீதா விசாரிக்-கிறார். எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், ''எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட அறிக்கை கிடைத்த பின், கலையரசன், 'சஸ்பெண்ட்' செய்யப்ப-டுவார்,'' என்றார்.