/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: டிரைவர் கைது
/
ரூ.3 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: டிரைவர் கைது
ADDED : நவ 06, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் போலீசார், நேற்று காலை, புளியம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 350 கிலோவில், புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். விசாரணையில், ஓட்டி வந்தவர், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக், 28, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், லாரியுடன், புகையிலையை பறிமுதல் செய்தனர்.

