/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2026 07:29 AM

சேலம்: சேலம் மாநகர கிழக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலை-மையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், எலி பேஸ்ட் அட்டை, கூண்டுடன், நேற்று சேலம் அரசு மருத்துவம-னைக்கு வந்தனர். அவர்களிடம், அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்தபோது, டீனிடம் மனு வழங்க வந்ததாக தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், 'இது போன்று மனு வழங்க செல்ல கூடாது. 4 பேர் மட்டும் செல்லுங்கள்' என அறிவுறுத்தினர். இதையடுத்து, 4 பேர் சென்று, மருத்துவமனை டீன் தேவி மீனாளிடம் அளித்த மனு:
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு இடையூறாகவும், நோய் தொற்று ஏற்படுத்தும் விதமாகவும், நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்படும் உணவு பொருட்கள் மீதும், உடைமைகள் மீதும், எலிகள் கூட்டம் கூட்ட-மாக வந்து செல்கின்றன.
உடனே நடவடிக்கை எடுத்து, எலிகளிடம் இருந்து நோயாளிக-ளையும், அதனால் ஏற்படும் தொற்றில் இருந்து பாதுகாக்கவும், எலிகளை பிடித்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

