/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது
/
கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது
கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது
கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது
ADDED : ஜன 30, 2025 05:11 AM
சேலம்: சேலம், குரங்குச்சாவடியில், வாரச்சந்தை நடக்கிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், காய்-கறி வாங்கிக்கொண்டு, 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். மீதி சில்லரை கொடுத்தபோது, அவர் கொடுத்த நோட்டு மீது சந்-தேகம் வந்ததால், வியாபாரி, சக வியாபாரிகளிடம் காட்டி-யுள்ளார். அதில் கள்ள நோட்டு என தெரிந்ததால், அவரை பிடித்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சோளக்காபட்-டியை சேர்ந்த தினேஷ், 30, என தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பட்டப்படிப்பு படித்து-விட்டு, திருப்பூரில் தினேஷ் பணிபுரிந்தார். சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம், 8,000 ரூபாய்க்கு, ஒரே மாதிரி எண் கொண்டு, 500 ரூபாய் கள்ள நோட்-டுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

