ADDED : அக் 08, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சென்னையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பயணித்த கார், இருசக்கர வாகனத்துடன் மோதியது. இதனால் தலைவருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, சேலம் வடக்கு
மாவட்ட செயலர் தெய்வானை தலைமையில் அக்கட்சியினர் நேற்று, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகே, மாலை, 6:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், ஓமலுார் - சேலம் சாலையில், 5 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். பின் அங்கு வந்த, ஓமலுார் போலீசார் சமாதானப்படுத்த, அவர்கள் கலைந்து சென்றனர்.