sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?

/

பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?

பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?

பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?


ADDED : டிச 17, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 17, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: குடும்ப தகராறு காரணமாக, பெயின்ட் கடைக்கு தீ வைக்கப்பட்டதா? என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓமலுார் அருகே, புளியம்பட்டி குடித்தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 36, தரண்யா, 34, தம்பதியர். புளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, தரண்யா பெயரில் உள்ள பெயின்ட் கடையை சதீஷ்குமார் நடத்தி வந்துள்ளார். நேற்று காலை, 9:15 மணிக்கு பூட்டியிருந்த கடையில்

தீப்பற்றி புகை வந்தது. உடனே வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர்.இது குறித்து ஓமலுார் போலீசார் கூறியதாவது: தரண்யாசதீஷ்குமார் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், இரு மாதங்களாக

இருவரும் தனித்தனியாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், தரண்யா வீட்டுக்கு சென்று அவரை வீட்டுக்கு அனுப்பி

வைக்குமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு சதீஷ்குமார், தனது மாமனார் வீட்டு பின்புறம் மாடியில் ஏறி,

பெயின்ட் கடைக்கு சென்று விட்டு வெளியே வந்ததை தரண்யா பெற்றோர் பார்த்ததாக புகார் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில்

கடையில் தீப்புகை வெளியேறியுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து

விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us