/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாலியை வாகனத்தில் வைத்துவிட்டு பெண் மாயம்..
/
தாலியை வாகனத்தில் வைத்துவிட்டு பெண் மாயம்..
ADDED : ஜன 03, 2025 04:01 AM
சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த, லாரி டிரைவர் ராகுல், 35. இவரது மனைவி கலைமணி, 31. இவர்கள், 14 ஆண்-டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் சேலம், 5 ரோட்டில் உள்ள கடைக்கு செல்வ-தாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் மாலை, 5:00 மணிக்கு, ராகுலுக்கு போன் செய்து பேசிய கலைமணி, 'தான் வந்த இருசக்கர வாகனத்தை, மாமாங்கம் ரயில்வே பால பகு-தியில் நிறுத்தி உள்ளேன். அதில், 5 பவுன் தாலி சங்கிலி, மொபைல் போனை வைத்துள்ளேன். என்னை தேட வேண்டாம்' என தெரிவித்துள் ளார். உறவினர்களை அனுப்பி, வாகனம், தாலியை மீட்ட ராகுல், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், பெண்ணை தேடுகின்றனர்.

