ADDED : அக் 26, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், மேற்குராஜாபாளையத்தை சேர்ந்த ஜிதேந்திரா மனைவி வெண்ணிலா, 35. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். பம்பை வேகமாக அடித்தபோது, மண்ணெண்ணெய் சிதறி, அடுப்பு தீப்பற்றி வெடித்து சிதறியது.
வெண்ணிலா படுகாயம் அடைந்து, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

