sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உழவர்சந்தையில் பெண் சாலை மறியல் விவசாயிகள் எச்சரிக்கையால் வாபஸ்

/

உழவர்சந்தையில் பெண் சாலை மறியல் விவசாயிகள் எச்சரிக்கையால் வாபஸ்

உழவர்சந்தையில் பெண் சாலை மறியல் விவசாயிகள் எச்சரிக்கையால் வாபஸ்

உழவர்சந்தையில் பெண் சாலை மறியல் விவசாயிகள் எச்சரிக்கையால் வாபஸ்


ADDED : ஜன 02, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்தவர் மஞ்சுளா, 39. ஆத்துார் உழவர் சந்தையில் காய்கறி விற்கிறார். சில நாட்களுக்கு முன், அவர் கொண்டு வரும் காய்கறி சரியாக இல்லை என, வேளாண் அலுவலர்கள் கூறினர். இதனால் தமிழக வேளாண் கமி-ஷனருக்கு, மஞ்சுளா புகார் அனுப்பினார்.

இதுதொடர்பாக சேலம் வேளாண் வணிக துணை இயக்குனர் சுஜிதா, நேற்று முன்தினம் விசாரித்தபோது, மஞ்சுளாவுக்கு எதி-ராக பல விவசாயிகள் குற்றம்சாட்டினர்.இந்நிலையில் மஞ்சுளா, வெளியே இருந்து அவரது ஆதரவாளர்-களை அழைத்துக்கொண்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு சந்-தைக்கு வந்தார். தொடர்ந்து வேளாண் அலுவலர்களை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டார்.

அங்குள்ள விவசாயிகள் சிலர், 'மஞ்சுளா, பழைய காய்கறி விற்-கிறார். சந்தைக்கு வரும் மக்களிடம் பிரச்னை செய்கிறார். இவரால் மற்ற விவசாயிகளுக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. மஞ்சுளா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்வோம்' என்றனர். இதையடுத்து மஞ்சுளா, மறியலை கைவிட்டார்.






      Dinamalar
      Follow us