sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிரிந்த மனைவி மகனையும் பார்க்க தடை 'டவரில்' ஏறி காரியம் சாதித்த தொழிலாளி

/

பிரிந்த மனைவி மகனையும் பார்க்க தடை 'டவரில்' ஏறி காரியம் சாதித்த தொழிலாளி

பிரிந்த மனைவி மகனையும் பார்க்க தடை 'டவரில்' ஏறி காரியம் சாதித்த தொழிலாளி

பிரிந்த மனைவி மகனையும் பார்க்க தடை 'டவரில்' ஏறி காரியம் சாதித்த தொழிலாளி


ADDED : ஜன 13, 2025 03:37 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, தளவாய்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி சின்னண்ணன், 41; இவரது மனைவி மாதேஸ்வரி, 38; தம்பதிக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். குடும்ப பிரச்னையால் மாதேஸ்வரி கணவனை பிரிந்து, சில மாதங்களாக தாயுடன் வசிக்கிறார். மகனை பார்க்க சின்னண்ணன் அவ்வப்போது சென்ற நிலையில், பார்க்க வரவேண்டாம் என்று மாதேஸ்வரி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னண்ணன், தீவட்டிப்பட்டி சமத்து-வபுரம் எதிரே, பயன்பாடற்ற நிலையில் உள்ள, 240 அடி உயர மொபைல்போன் கோபுரத்தில் நேற்று மதியம் ஏறினார். 'மனை-விக்கு தான் கட்டிய தாலியை வாங்கி தர வேண்டும். அப்போது தான் இறங்குவேன்' என கூறினார். தீவட்டிப்பட்டி போலீசார், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாத நிலையில், மாதேஸ்வரியை வரவழைத்து பேச வைத்தனர். இதில் அவர் சமாதானமாகவே, 3 மணி நேரத்துக்கு பின், தீயணைப்பு வீரர்கள் டவரில் இருந்து பத்திரமாக இறக்-கினர். உரிய அறிவுரை கூறி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us