/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போதை'யில் தீக்குளித்த தொழிலாளி பலி
/
'போதை'யில் தீக்குளித்த தொழிலாளி பலி
ADDED : டிச 22, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச.
22-
சேலம், சூரமங்கலம் அடுத்த சேலத்தாம்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன், 42. இவரது மனைவி கவிதா, 35. இவர்களுக்கு, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தம்பதியர், வெவ்வேறு வெள்ளி பட்டறைகளில் பணி புரிந்தனர். மது பழக்கம் உள்ள வாசுதேவன், சரிவர வேலைக்கு போகவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. கடந்த, 18ல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த வாசுதேவன், மாலை, 6:30 மணிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி, அவராகவே தீ வைத்துக்கொண்டார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் இறந்தார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.