/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் மீது மோதி வாலிபர் உயிரிழப்பு
/
மொபட் மீது மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : அக் 24, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், ஓமலுார், ஆட்டுக்காரனுாரை சேர்ந்தவர் வீரமணி, 26. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்தார். தீபாவளியை ஒட்டி, கடந்த, 19ல் சங்ககிரி அருகே கோழிநத்தத்தில் உள்ள தாய் வீட்டுக்கு, 'ஹீரோ' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
தாரமங்கலம் அருகே பனங்காட்டூரில் சென்றபோது, முன்புறம் சென்ற, டி.வி.எஸ்., 50 மொபட் மீது மோதியதில், தடுமாறி விழுந்த வீரமணிக்கு தலையில் அடிபட்டது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். வீரமணி மனைவி மஞ்சு புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

