ADDED : ஏப் 25, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கவுதம், 19. இவர் கடந்த, 21 இரவு, 11:30 மணிக்கு, குகை பகுதியில், 'பல்சர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த யமஹா பைக், நேருக்கு நேராக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட கவுதம், பலத்த காயம் அடைந்தார். அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.