sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு: மாவட்டத்தில் பலர் லட்சங்கள் இழப்பு

/

ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு: மாவட்டத்தில் பலர் லட்சங்கள் இழப்பு

ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு: மாவட்டத்தில் பலர் லட்சங்கள் இழப்பு

ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு: மாவட்டத்தில் பலர் லட்சங்கள் இழப்பு


ADDED : செப் 28, 2025 06:56 AM

Google News

ADDED : செப் 28, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பெண்கள், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைனில் தொடர்ந்து மோசடி கும்பல் பல லட்சங்களை மோசடி செய்து வருகிறது.

ஜன.26ல் திருப்புத்துாரில் ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி., பணியாளர் குமாரசாமியிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என கூறி ஒரு கும்பல் 10 வங்கி கணக்கில் ரூ.82.55 லட்சம் வரை மோசடி செய்தது.

தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த சந்திரன் 88. தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஜன.13 அன்று வாட்ஸ் ஆப்பில் பேசிய நபர் ஒருவர் தான் பங்குச்சந்தை சார்ந்த முதலீடு மற்றும் ஆலோசகராகச் செயல்பட்டு வருவதாக கூறி அவரை நம்ப வைத்து 87 லட்சம் மோசடி செய்தது.

காரைக்குடி முதியவரிடம் தங்களது வங்கி கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாக போலீஸ் போல் பேசி அச்சத்தை ஏற்படுத்தி அவரை நம்ப வைத்து அவரின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று கூறி 46 லட்சத்தை மோசடி செய்தனர்.

சிவகங்கையில் ஒரு வழக்கறிஞரிடம் போலீஸ் போல் பேசி அவரை மிரட்டி டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக கூறி பல லட்சங்கள் மோசடி செய்தனர்.

ஆக.27 சிவகங்கை செந்தமிழ் நகர் இளைஞரிடம் ரூ.8.32 லட்சம் மோசடி, செப்.1 காரைக்குடி இளைஞனிடம் வாகனத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.85 ஆயிரம் மோசடி, சிங்கம்புணரி அருகே மனப்பட்டி பெண்ணிடம் வங்கி கணக்கில் இருந்து ரூ.ஒரு லட்சத்து 14 ஆயிரம் திருட்டு, இது குறித்த புகார்கள் அனைத்தும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஏமாறும் மக்கள் ஏமாற்றம் அடைந்துகொண்டே உள்ளனர். பொதுவாக மக்களின் அதிக ஆசையும், அறியாமையும், போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

மாவட்டத்தில் உள்ள மக்கள் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழப்புடன் இருக்கவேண்டும். நிதி மோசடி, சமூக ஊடகங்கள் தொடர்பான சிக்கல், போலி கடன் பயன்பாடு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தொடர்பான மோசடி, ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக மோசடி, ஆன்லைன் பரிசு மோசடி குறித்த விழிப்புணர்வை பொதுவாக அனைத்து பொதுமக்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

பொதுமக்கள் சைபர் கிரைம் குறித்த ஆன்லைன் புகார்கள் தொடர்பான ஹெல்ப்லைன் எண் 1930, மற்றும் இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில், பெண்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 181, குழந்தைகள் குறித்து உதவி எண் 1098 எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். அனைவரும் பேராசை இன்றி விழிப்புடன் இருந்தாலே ஆன்லைனில் ஏமாற்றும் மோசடி கும்பலில் இருந்து தப்பித்து விடலாம்.






      Dinamalar
      Follow us