sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம்

/

பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம்

பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம்

பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம்


ADDED : செப் 06, 2024 01:46 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டமும், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறும். நாளை காலை சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும்

நகரத்தார் குடவரைக்கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்திப் பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலையில் வெள்ளிக்கேடகத் தில் விநாயகர் புறப்பாடும், இரவில் சிம்மம்,பூதம்,கமலம், ரிஷபம்,யானை,மயில்,குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

ஆறாம் திருநாளில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று 9ம் திருநாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கு மேல் விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்குகிறது. மாலை 4:00 மணிக்கு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க துவங்கலாம். இரவு 10:30 மணி வரை தரிசிக்க அனுமதி உண்டு.

நாளை காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் குளத்தில் காலை 9:30 மணிக்கு மேல் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி உத்ஸவம் துவங்கும், மதியம் 1:30 மணிக்கு மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவு 11:00 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.






      Dinamalar
      Follow us