sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் ஆபத்தான கம்பி

/

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் ஆபத்தான கம்பி

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் ஆபத்தான கம்பி

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் ஆபத்தான கம்பி


ADDED : ஜூன் 29, 2024 05:43 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டி கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பாச்சேத்தி, ஆவரங்காடு, பிச்சைப்பிள்ளையேந்தல், மாரநாடு உள்ளிட்ட கிராம மக்கள் திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து தான் சிவகங்கை சென்று வர வேண்டும்.

1991ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்தப்பாலம் போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. பாலத்தின் பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன.

பாலத்தை இணைக்கும் இடத்தில் பாலம் சேதமடைந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே விபத்தை ஏற்படுத்தும் வகையில் நீட்டி கொண்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே பாலத்தை ஆக்கிரமித்து குடிநீர் குழாயை பொருத்தி இருப்பதால் சிரமத்திற்குள்ளாகி இருந்த நிலையில் பராமரிப்பு இன்றி மேலும் வாகன ஓட்டிகளை பாலத்தின் கம்பிகளும் வாகனங்களை பலத்த சேதப்படுத்தி ஏற்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us