sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடின்றி  அரசு பள்ளி துாய்மை பணிகளில் தொய்வு 

/

மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடின்றி  அரசு பள்ளி துாய்மை பணிகளில் தொய்வு 

மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடின்றி  அரசு பள்ளி துாய்மை பணிகளில் தொய்வு 

மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடின்றி  அரசு பள்ளி துாய்மை பணிகளில் தொய்வு 


ADDED : ஆக 29, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடின்றி அரசு பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததால், பள்ளிகளில் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல், உயர், நடுநிலை, தொடக்க பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் பயன்படுத்தும் கழிப்பிடங்களில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக அந்தந்த பள்ளி கல்வி குழு மூலம் பள்ளிக்கு ஒரு துாய்மை பணியாளரை நியமித்து, மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிதியை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

துாய்மை பணியாளர்களுக்கு அரசு மேல்நிலை ரூ.3000, உயர்நிலை ரூ.2500, நடுநிலை ரூ.1500, தொடக்க பள்ளிக்கு ரூ.1000 வீதம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இது தவிர பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்து, சுகாதாரம் காப்பதற்கென பினாயில், பிளிச்சிங் பவுடர் வாங்க பள்ளிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடின்றி பள்ளி துாய்மை பணியாளருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்களின் கழிப்பிடங்களில் சுகாதாரம் காப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு துாய்மை பணியாளரின் சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும்.

ஏப்.,க்கு பின் நிதிஒதுக்கீடில்லை


ஊரக வளர்ச்சிதுறை அதிகாரி கூறியதாவது:

2024 ஏப்.,க்கு பின் மாநில நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடு வரவில்லை. இதனால் துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் இருக்கிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளி துாய்மை பணியாளருக்கான சம்பளமும் உயர்த்தி வழங்கப்பட முடியவில்லை. ஆசிரியர்கள், கலெக்டர்களிடம் புகார் அளிக்கின்றனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், தடையின்றி சம்பளம் கிடைக்கும், என்றார்.






      Dinamalar
      Follow us