sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எல்லை பிரச்னையால் படமாத்துாரில் தொடரும் வழிப்பறி அச்சத்தில் கிராம மக்கள்

/

எல்லை பிரச்னையால் படமாத்துாரில் தொடரும் வழிப்பறி அச்சத்தில் கிராம மக்கள்

எல்லை பிரச்னையால் படமாத்துாரில் தொடரும் வழிப்பறி அச்சத்தில் கிராம மக்கள்

எல்லை பிரச்னையால் படமாத்துாரில் தொடரும் வழிப்பறி அச்சத்தில் கிராம மக்கள்


ADDED : ஜூன் 14, 2024 04:52 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி - படமாத்துார் ரோட்டில் தொடர்ந்து நடந்து வரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பாச்சேத்தி, மாரநாடு, கானுார்,துாதை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிவகங்கை செல்ல திருப்பாச்சேத்தி- படமாத்துார் ரோட்டை நம்பியே உள்ளனர். இப்பகுதி மக்கள் தினசரி கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த ரோடு வழியாக சென்று வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த ரோட்டில் சமூக விரோதிகள் பலரும் வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து வாள், அருவாளை காட்டி மிரட்டி அலைபேசி, பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து வருகின்றனர்.

எதுவும் கிடைக்காவிட்டால் டூ வீலர்களில் வருபவர்களை மிரட்டி டூ வீலர்களையும் பறித்து கொள்கின்றனர். இந்த ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை மையம் உள்ளிட்டவற்றில் பலமுறை வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.

சில நாட்களுக்கு முன் டூவீலர்களில் வந்தவர்களை மிரட்டி டூவீலர், அலைபேசி உள்ளிட்டவற்றை இருவர் பறித்து சென்றனர். தொடர்ந்து இந்த பாதையில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் பலரும் இப்பாதையை தவிர்த்து வேறு வழியின்றி மானாமதுரை சுற்றி செல்கின்றனர். இதனால் நேரம் விரயமாவதுடன் கூடுதல் செலவீனமும் ஏற்பட்டு வருகிறது.

கிராமமக்கள் கூறுகையில்: திருப்பாச்சேத்தி - படமாத்துார் ரோடு திருப்பாச்சேத்தி, பூவந்தி, சிவகங்கை தாலுகா காவல் நிலையம் என மூன்று காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது.

எனவே யார் நடவடிக்கை எடுப்பது என எல்லைப்பிரச்னை காரணமாக போலீசார் கண்டு கொள்வது கிடையாது.

இப்பாதையில் ரோந்து போலீசாரும் இரவு நேரங்களில் வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் நின்று எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு சென்று விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட எஸ்.பி., இப்பாதையில் நடந்து வரும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us