sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாகன வசதியின்றி தவிக்கும் கீழடி தொல்லியல் துறை

/

வாகன வசதியின்றி தவிக்கும் கீழடி தொல்லியல் துறை

வாகன வசதியின்றி தவிக்கும் கீழடி தொல்லியல் துறை

வாகன வசதியின்றி தவிக்கும் கீழடி தொல்லியல் துறை


ADDED : மார் 13, 2025 04:53 AM

Google News

ADDED : மார் 13, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அரசு வாகன வசதியில்லாததால் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 17 கோடியே 80லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன, கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு பார்வையாளர்கள் தினசரி 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

இங்கு தொல்லியல் துறை இயக்குனர் ( கீழடி பிரிவு) ரமேஷ், உதவி இயக்குனர் அஜய்குமார் தலைமையில் தொல்லியல் துறை மாணவ, மாணவியர்கள், 50க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும் அருங்காட்சியகத்திலும் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கீழடி தொல்லியல் பிரிவிற்கு வாகன வசதி ஏதும் இல்லை.

அதிகாரிகள் பெரும்பாலும் வாடகைக்கு வாகனங்களை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு பொருட்களை காட்சிப்படுத்தவும் பொருட்களை வாடகை வாகனங்களில் தான் கொண்டு சென்று வருகின்றனர்.

அருங்காட்சியகத்தில் இருந்து திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் வாடகை வாகனம் பயன்படுத்தி வருகின்றனர்.

தொல்லியல் துறைக்கு ஏற்கனவே ஜீப் வழங்கப்பட்டிருந்து. தற்போது அந்த வாகனம் சென்னைக்கே கொண்டு செல்லப்பட்டு விட்டது. திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க மதுரை அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.

அரசு வாகனம் இல்லாததால் மதுரை நகருக்குள் வாடகை வாகனம் மூலம் சென்று வருவது மிகவும் கால தாமதம் ஆகி வருவதுடன் தேவையற்ற பொருட்செலவையும் ஏற்படுத்தி வருகிறது.






      Dinamalar
      Follow us