sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்

/

அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்

அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்

அவசர தேவைக்கு திருடியதாக திரும்ப கிடைத்த பைக்கில் கடிதம்


ADDED : பிப் 26, 2025 02:02 AM

Google News

ADDED : பிப் 26, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பழையூரைச் சேர்ந்தவர் வீரமணி. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், தன் மனைவி அம்பிகா பெயரில் ஆறு மாதங்களுக்கு முன், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் டூ - வீலரை வாங்கியுள்ளார்.

பிப்., 20 இரவு, வீட்டின் முன் நிறுத்தப்பட்ட டூ - வீலர் திருடு போனது. திருப்புவனம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, அதே பகுதியில் திருடு போன டூ - வீலர் திரும்ப கிடைத்தது.

டூ - வீலர் முன்புறம், வெள்ளை தாளில், 'பிளாக் பாண்டா பயலுக' என்ற பெயரில், ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதில், 'அவசர தேவைக்காக டூ - வீலரை திருடி, 450 கி.மீ., துாரம் ஓட்டினோம். அதற்கான சேதத்திற்கு, 1,500 ரூபாய் வைத்துள்ளோம். டூ - வீலர் திருடியதற்கு என்னை திட்டியிருப்பீர்கள். மீண்டும் வைத்துள்ளேன். வருத்தப்படணும்; இல்லை என்றால் வருந்த வைப்போம்' என, எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட போலீசார், கடிதம் எழுதிய, 'பிளாக் பாண்டா பயலுக'ளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us