/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரை --- ராமேஸ்வரம் பயண நேரம் அதிகரிப்பு தவிக்கும் பயணிகள்
/
மதுரை --- ராமேஸ்வரம் பயண நேரம் அதிகரிப்பு தவிக்கும் பயணிகள்
மதுரை --- ராமேஸ்வரம் பயண நேரம் அதிகரிப்பு தவிக்கும் பயணிகள்
மதுரை --- ராமேஸ்வரம் பயண நேரம் அதிகரிப்பு தவிக்கும் பயணிகள்
ADDED : ஏப் 16, 2024 04:13 AM
திருப்புவனம்: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான வழித்தடத்தில் பஸ் ஸ்டாப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பயண நேரம் அதிகரித்துள்ளதால் சிரமம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனுார், பரமக்குடி என 36 பஸ் ஸ்டாப்களுடன் ராமேஸ்வரத்திற்கு பயண கட்டணம் 136 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு காரைக்குடி கோட்டம் சார்பாக அரசு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து அரசு ஊழியர்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் என பலரும் அரசு பஸ்களை நம்பியே சென்று வருகின்றனர்.
மற்ற பஸ்களை விட காரைக்குடி கோட்ட பஸ்கள் (பயண நேரம் நான்கரை மணி நேரம்) மெதுவாக செல்வதாகவும், சுகாதாரமின்றி இருப்பதாகவும், அதிக ஸ்டாப்களில் நின்று செல்வதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதே துாரத்தை மதுரை கோட்ட (மொத்தமே எட்டு பஸ் ஸ்டாப், மூன்றரை மணி நேரம்) பஸ்கள் அதே கட்டணத்துடன் குறைந்த நேரத்தில் செல்வதால் பலரும் மதுரை கோட்ட பஸ்களை நாடி வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் பயணிகள் அமர இடம் கிடைப்பதில்லை. இதனால் தொலைதுார பயணத்திற்கு அரசு பஸ்களை நம்பாமல் தனியார் பஸ்களை நம்பி வருகின்றனர்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில் : புத்தம் புதிய பஸ்களில் கூட கதவு, ஜன்னல் திறக்க முடிவதில்லை, பழுதான டயர்களுடன் தான் இயக்க வேண்டியதுள்ளது. பஸ்களையும் பராமரிப்பதில்லை, சுத்தம் செய்வதில்லை.
எல்லா பஸ் ஸ்டாப்களிலும் பஸ்களை நிறுத்தினால் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகள் எங்களிடம் தகராறு செய்கின்றனர் என புலம்புகின்றனர்.
தற்போது புதிதாக மஞ்சள் நிற பஸ்களை இயக்கி வருகின்றனர். இந்த பஸ்களை சிறிது நேரம் வெயிலில் நிறுத்தினால் கூட பஸ் முழுவதும் வெப்பம் அதிகரித்து இருக்கவே முடியவில்லை. இரு பயணிகள் அமரும் இருக்கை வெகு நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளதால் கால்களை வைக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
நீண்ட துாரம் பயணம் செய்யும் பயணிகள் கால்களை அசைக்க கூட முடியாமல் கண்டக்டர்களுடன் தகராறு செய்கின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய பஸ்களை ஆய்வு செய்து பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

