sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் கையிருப்பில் உரம்; வேளாண் இணை இயக்குனர் தகவல்  

/

சிவகங்கையில் கையிருப்பில் உரம்; வேளாண் இணை இயக்குனர் தகவல்  

சிவகங்கையில் கையிருப்பில் உரம்; வேளாண் இணை இயக்குனர் தகவல்  

சிவகங்கையில் கையிருப்பில் உரம்; வேளாண் இணை இயக்குனர் தகவல்  


ADDED : ஜூன் 14, 2024 10:26 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் கோடவுன்களில் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.

சிவகங்கை டான்பெட் கோடவுனில் இருப்பில் உள்ள உரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது:

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள்மூலம் உரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான உரம் முன்கூட்டியே அனைத்து கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றவர், பெறாத விவசாயிகள் அனைவருக்கும் உரம் தடையின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யூரியா 1117 டன், டி.ஏ.பி., 357 டன், பொட்டாஷ் 321 டன், காம்ப்ளக்ஸ் 632 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் யூரியா 3820 டன், டி.ஏ.பி., 751 டன், பொட்டாஷ் 571 டன், காம்ப்ளக்ஸ் 2335 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெற்று பயன்பெறலாம் என்றார்.

ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், டான்பெட் மண்டல மேலாளர் சரவணன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us