/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கூடுதலாக உயர்மின் கோபுர விளக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
/
திருப்புவனத்தில் கூடுதலாக உயர்மின் கோபுர விளக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
திருப்புவனத்தில் கூடுதலாக உயர்மின் கோபுர விளக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
திருப்புவனத்தில் கூடுதலாக உயர்மின் கோபுர விளக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2024 04:40 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் கூடுதலாக பொது இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் நகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.நகரில் சிவகங்கை ரோடு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அ.தி.மு.க., ஆட்சியின் போது அமைக்கப்பட்ட சோலார் விளக்குகளே உள்ளன. புதிதாக உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்படவே இல்லை. நகரில் பல இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நரிக்குடி ரோடு சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கே இல்லை. இரவு ஒன்பது மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட பின் இருள் சூழ்ந்து தனியாக யாருமே நிற்க முடிவதில்லை.
இரவில் வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடனேயே நிற்க வேண்டியுள்ளது. அதே போல நான்கு வழிச்சாலை நிர்வாகம் அல்லிநகரம் செல்லும் பாதையில் உயர் மின் கோபுர விளக்கு அமைத்துள்ள நிலையில் அருகிலேயே பேரூராட்சி நிர்வாகமும் உயர் கோபுர விளக்கை அமைத்துள்ளது.எதிர்புறம் அமைத்திருந்தால் கூட கிராமமக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும், ஒரே இடத்தில் இருதரப்பும் உயர் கோபுர விளக்கு அமைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.