ADDED : மார் 12, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டை தாலுகா குறுந்தனக்கோட்டை பொன்னையா மகன் முத்துராமன்,35., கல்குவாரியில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு தேவகோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு டூவீலரில் சென்றார்.
முள்ளிக்குண்டு அருகே புறவழிச்சாலையில் திரும்பும் போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் டூவீலரில் மோதியது. இதில் முத்துராமன் பலியானார். ஆறாவயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.