sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

/

காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு


ADDED : ஏப் 05, 2024 12:44 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காருக்குள் சிக்கித்தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28 ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று பொங்கல் விழா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கைமாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த கண்ணன் குடும்பத்தினருடன் காரில் கோயிலுக்கு வந்திருந்தார். காரை கோயிலுக்கு அருகிலேயே நிறுத்தினார். மற்றவர்கள் வெளியில் நின்றனர். அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ,காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தது. கார் சாவியும் உள்ளே இருந்த நிலையில் அனைத்து கதவுகளும் தானாக மூடிக்கொண்டதால் காருக்குள் சிக்கித்தவித்தது. தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் நாகராஜன், மானாமதுரை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் காரின் கதவை லாவகமாக திறந்து குழந்தையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us