/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்துணவுக்கு அழுகிய முட்டை மைய பொறுப்பாளர்கள் தவிப்பு
/
சத்துணவுக்கு அழுகிய முட்டை மைய பொறுப்பாளர்கள் தவிப்பு
சத்துணவுக்கு அழுகிய முட்டை மைய பொறுப்பாளர்கள் தவிப்பு
சத்துணவுக்கு அழுகிய முட்டை மைய பொறுப்பாளர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:43 AM

சிவகங்கை:சிவகங்கையில் சத்துணவு மையங்களுக்கு ஒதுக்கிய முட்டை அழுகியதால் மைய பொறுப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 1293 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அவித்த முட்டை வழங்கப்பட வேண்டும். நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வாரத்திற்கு இரு முறை முட்டை சப்ளை செய்ய வேண்டும். வாரம் இரு முறை வந்து செல்வதற்கான வாகன வாடகையையும் அரசு செலுத்தி விடுகிறது.
ஆனால் முட்டை ஒப்பந்ததாரர்கள் வாகன வாடகையை மிச்சம் செய்யும் நோக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து மொத்த முட்டைகளையும் பள்ளிகளுக்கு வழங்கி விடுகின்றனர்.
பள்ளிகளில் இந்த முட்டை விரைவில் அழுகிவிடுகின்றன. கடந்த வாரம் பெரும்பாலான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதில் அழுகிய முட்டைகள் அதிகம் இருந்தன. அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க முடியாமல், சத்துணவு மைய பொறுப்பாளர்கள் தவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே சிவகங்கைக்கு வரும் முட்டைகள் அழுகிவிடுவதாக உயர் அதிகாரிகளுக்கு சத்துணவு மைய பொறுப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்படி இருந்தும் தொடர்ந்து அழுகிய முட்டைகளே சப்ளையாகின்றன.
இது குறித்து கலெக்டர் பி.ஏ.,(சத்துணவு) மல்லிகாவிடம் கேட்டபோது, அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இது குறித்து விசாரிக்கிறோம் என்றார்.