sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை

/

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : மார் 06, 2025 05:16 AM

Google News

ADDED : மார் 06, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18 படி நகர், பாரதி நகர், சூடாமணிபுரம், அழகப்பாபுரம், வள்ளலார் தெரு, சாமியார் தோட்டம் முத்துராமலிங்க தேவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக மனு அளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தினர். மக்கள் பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மூலம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us