sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்த ஆசிரியர்

/

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்த ஆசிரியர்

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்த ஆசிரியர்

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்த ஆசிரியர்


ADDED : பிப் 22, 2025 10:41 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் வட்டார அளவில் தேர்வு எழுத வந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர் பிரியாணி, குஸ்கா, பரோட்டா வாங்கி கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி உதவி தொகைக்காக 8ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு திருப்புவனம் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் தேர்வு நடந்தது. 558 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்.

கிராமப்புறங்களில் இருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களை அழைத்து வந்திருந்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடந்தது.

தேர்வு முடிந்த பின் மீண்டும் ஆசிரியர்கள் கிராமங்களுக்கு மாணவ, மாணவியர்களை அழைத்து சென்றனர்.

திருப்பாச்சேத்தி தெற்கு நடுநிலைப்பள்ளியில் இருந்து 25 மாணவ, மாணவியர்களை ஆசிரியர் கதிரவன் அழைத்து வந்திருந்தார். மதிய நேரம் என்பதால் மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர் சொந்த செலவில் ஹோட்டலில் பிரியாணி, குஸ்கா, பரோட்டா உள்ளிட்டவற்றை சாப்பிட வாங்கி கொடுத்தார்.

மத்திய அரசின் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 9,10,11,12ம் வகுப்புகளில் படிக்க மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.






      Dinamalar
      Follow us