/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி கொடியேற்றம்
/
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி கொடியேற்றம்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி கொடியேற்றம்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி கொடியேற்றம்
ADDED : மார் 30, 2024 04:19 AM

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். பொங்கல் விழா ஏப்ரல்4ம் தேதி தேதி நடைபெற உள்ளது.
இங்கு பங்குனியில் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழாவின்போது அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தீச்சட்டி,கரும்பு தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வர்.
இந்தாண்டிற்க்கான விழா நேற்று முன்தினம் இரவு 10:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் 5ம் தேதி இரவு 7: 10 மணிக்கு மின் அலங்கார தேரோட்டமும்,6ம் தேதி காலை 7:40 மணிக்கு பால்குடம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கும் நடைபெற உள்ளது.7ம் தேதி கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை,இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

