sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருவாசகம் முற்றோதல்

/

திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்


ADDED : ஆக 26, 2024 05:32 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை:

மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த சிவலிங்கத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கோவையைச் சேர்ந்த அறன் அமைப்பினர் சிதிலமடைந்து கிடந்த சிவலிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து சுவாமிக்கு பழமலைநாதர், அம்மனுக்கு பெரிய நாயகி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷங்கள், மற்றும் சிவராத்திரி விழாக்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் சிவனடியார்கள் கூட்டத்தினர் மற்றும் மேலப்பசலை கிராமத்தினர் கோயில் முன்பாக திருவாசகம் முற்றோதல் விழாவை நடத்தினர்.

இதில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.






      Dinamalar
      Follow us